pic 1
“தர்ம தேசன” எனும் உன்னதமான நிகழ்ச்சியொன்று திரிபீடகத்தை ஒர் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தமைக்கான தேசிய நிகழ்விற்கிணையாக ஓய்வூதியத் திணைக்களத்தின் அலுவலர்களது நலன்புரிச் சமூகத்தினால் திணைக்கள வளாகத்தில் 2019.03.22 ஆம் திகதி நடாத்தப்பட்டது. “தர்ம தேசன” நிகழ்வானது அதி வணக்கத்திற்குரிய கடுவல, மஹ்மேவுனவ அஸபுவ தெரரால் பௌத்தைக் காக்கும் உன்னதமான திரிபீடக தர்ம ஓதலுடன் நடாத்தப்பட்டது. அதி வணக்கத்திற்குரிய அரஹத் தேரர் அவர்களால் வாய்வழியா பரம்பரை பரம்பரையாக திரிபீடக தர்மத்தை காப்பாற்றிக் கொண்ட உலகின் தலைசிறந்த ஒரு தேசமாக திரிபீடிக தர்மத்தை இந்த உலகின் மிகப்பெரிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இத் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக திரிபீடக தர்மத்தை ஆழ்ந்து படிப்பதற்கான தேவைப்பாட்டை அவர் மேலும் வலியுறுத்தினார். இவ் உன்னதமான நிகழ்ச்சியில் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி டயஸ், மேலதிக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் கே.ஆர்.பத்மப்பிரிய, ஓய்வூதியப் பணிப்பாளர் றுசித தர்மசேன ஆகியோர் அடங்கலாக பதவி நிலை அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.