pic 1
  14/2019 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கமைய, நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களும் தற்போது ஓய்வூதிய மறுசீரமைப்புச் செயல்முறயை செய்து வருவதுடன் கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஓய்வூதிய திருத்தம் தொடர்பிலான தற்போதைய முன்னேற்றம் பற்றி விவாதிக்கும் பொருட்டு கொழும்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் சேவையாற்றும் கணக்காளர்களுக்காகத் திணைக்களத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2016.08.01 ஆம் திகதி திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

31.12.2016 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அலுவலர்கள், முப்படையினர் மற்றும் அவர்களது விதவைகள் அநாதைகளுக்கான ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கான ஓய்வூதியத் திருத்தம் 14/2019 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னரும், சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின்னரும் பல கட்டங்களாக கொழும்பு மாவட்டத்தில் ஓய்வூதியத் திருத்தத்துடன் தொடர்புபட்டுப் பணிபுரியும் கணக்காளர்கள் மற்றும் ஓய்வூதிய அலுவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பயிற்ச்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.

ஓய்வூதிய திருத்தத்தின் செயற்திறனை மேம்படுத்தி ஓய்வூதியர்களுக்குக் கிடைக்கப்பெறும் நன்மைகளை துரிதமாக்கும் நொக்கத்துடன், சம்பள மறுசீரமைப்பு செயல்முறைக்கு வடிவமைக்கப்பட்ட திணைக்களத்தின் த.தொ மென்பொருளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து அலுவலர்களுக்கு திணைக்களத்தால் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டதுடன் சம்பள மாற்றத்தின் போது மென்பொருளுடன் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வுகளும் வழங்கப்பட்டன.

கொழும்பு மாவட்டத்தின் ஓய்வூதிய திருத்தத்த முன்னேற்ற நிலையை மேல் மாகாணத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் துரிதமாக அவர்களுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக பொருத்தமான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அலுவலர்களுக்கு கே.ஆர்.பத்மப்பிரிய, மேலதிய ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அவர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் .

கே.ஆர்.பத்மப்பிரிய, மேலதிய ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம், பிரதம கணக்காளர் ஏ.டி.ரி.என்.அபயசிங்க, பணிப்பாளர் (நிர்வாகம்) கே.ஆர்.ஏ.தர்மசேன மற்றும் உதவிப்பணிப்பாளர் (தகவல்தொழில்நுட்பம் மற்றும் கொள்கை) புத்திக அமல் ஜயதிஸ்ஸ ஆகியோருடன் கொழும்பு மாவட்டச் செயலகப் பிரதம கணக்காளர் ஜி.ஜயவீர மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் ஓய்வூதிய அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.   



pic 1

03/2016  ஆம் இலக்கப் பொது நிர்வாக சுற்றறிக்கைக்கமைய திருத்தப்பட்ட அரசாங்க சேவை சம்பளத்தின் பிரகாரம் 2017/01/01 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் ஓய்வூதியம் பெற்ற அனைத்து அரச சேவை அலுவலர்களது ஓய்வூதியத்தில் திருத்தத்தை மேற்கொள்ளும் பொருட்டு வெளியிடப்பட்ட 31.05.2017 ஆம் திகதிய 14/2019 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட 1/2019  ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.

அரச சேவை அலுவலர்களது ஓய்வூதியத்சதில் திருத்த்த்தை மேற்கொள்ளல் தொடர்பில் 01/2019 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டுதல்களைப் பார்வையிட இங்கு அழுத்தவும் (Click).

pic 1
“தர்ம தேசன” எனும் உன்னதமான நிகழ்ச்சியொன்று திரிபீடகத்தை ஒர் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தமைக்கான தேசிய நிகழ்விற்கிணையாக ஓய்வூதியத் திணைக்களத்தின் அலுவலர்களது நலன்புரிச் சமூகத்தினால் திணைக்கள வளாகத்தில் 2019.03.22 ஆம் திகதி நடாத்தப்பட்டது. “தர்ம தேசன” நிகழ்வானது அதி வணக்கத்திற்குரிய கடுவல, மஹ்மேவுனவ அஸபுவ தெரரால் பௌத்தைக் காக்கும் உன்னதமான திரிபீடக தர்ம ஓதலுடன் நடாத்தப்பட்டது. அதி வணக்கத்திற்குரிய அரஹத் தேரர் அவர்களால் வாய்வழியா பரம்பரை பரம்பரையாக திரிபீடக தர்மத்தை காப்பாற்றிக் கொண்ட உலகின் தலைசிறந்த ஒரு தேசமாக திரிபீடிக தர்மத்தை இந்த உலகின் மிகப்பெரிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இத் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக திரிபீடக தர்மத்தை ஆழ்ந்து படிப்பதற்கான தேவைப்பாட்டை அவர் மேலும் வலியுறுத்தினார். இவ் உன்னதமான நிகழ்ச்சியில் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி டயஸ், மேலதிக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் கே.ஆர்.பத்மப்பிரிய, ஓய்வூதியப் பணிப்பாளர் றுசித தர்மசேன ஆகியோர் அடங்கலாக பதவி நிலை அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.