pic 1
 ஓய்வூதியத் திணைக்கள நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் ஓய்வூதியத் திணைக்கள வளாகத்தில் 2017.12.23 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு ஆண்டு இறுதி இசை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

ஆண்டு முழுவதும் பணிபுரியும் திணைக்கள அலுவலர்களின் மிகவும் பரபரப்பான மனநிலைக்கு ஒரு இடைவேளையை வழங்குமுகமாக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வை வண்ணமயமாக்க அலுவலர்கள் உட்பட ஏனைய அதிகாரிகளும் பாடல்களைப்பாடி தமது அதீத பங்களிப்பை நல்கினர். வருட இறுதியின் கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களாகிய இந் நாளில் ஓய்வூதியத் திணைக்கள அலுவலர்களது பிள்ளைகள் சார்பாக பாடல் நிகழ்ச்சிகள், குறும் படங்கள், கணனி பொழுது போக்கு விளையாட்டுகள் அடங்கலாக பல் வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் பங்கேற்ற அனைத்து குழந்தைகள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி. டயாஸ், மேலதிக பணிப்பாளர் நாயகம் கே.ஆர்.பத்மபிரிய உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றதுடன் இப் பொழுதுபோக்கு நிகழ்வை திணைக்கள நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.