2025 ஜனவரி 1 ஆந் திகதி திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி ஓய்வூதியத் திணைக்களத்தின் புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பெற்றார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அலுவலரான திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி 2000 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார். ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் திருகோணமலை மாவட்ட செயலாளராக பணியாற்றியுள்ளார்.
ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ. ஜகத் டீ. டயஸ் அவர்கள் 2024 ஆம் ஆண்டு செப்டெப்பர் 16 ஆந் திகதி ஓய்வு பெற்றதுடன் 2024 டிசெம்பர் 31 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்ட இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அவ் வெற்றிடத்திற்கு திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்களை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அபிவிருத்தி மற்றும் நிர்வாகம் தொடர்பாக ஏறக்குறைய 25 வருட அனுபமுடைய இவரது நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலானது ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பம் மற்றும் புதிய முயற்சிகள் மூலமாக 725,000 இற்கு மேற்பட்ட மூத்த ஓய்வூதிய சமூகத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு முறையினை மேம்படுத்த பெரிதும் துணைபுரியும்.
புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தின் எதிர்கால கடமைகளுக்கும் மற்றும் ஓய்வூதியத் திணைக்களத்தின் அனைத்து அலுவலர்கள், பிரதேச செயலகங்களில் பணிபுரியும் ஓய்வூதிய திணைக்கள அலுவலர்கள் மற்றும் ஓய்வூதிய சமூகத்திற்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.